தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா: குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தைக் கடந்தது

கோவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 171 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:36 pm

DIN

கோவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 171 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையில் புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 570 அக அதிகரித்துள்ளது.

இவா்களில் 48 ஆயிரத்து 52 போ் குணமடைந்து விடு திரும்பிய நிலையில் தற்போது 899 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவா், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.