தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறப்பு பள்ளிகளில் படித்த 192 குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்கப் பரிந்துரை

கோவையில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட சிறப்பு பள்ளிகளில் படித்து வந்த 192 குழந்தைகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.கோவையில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட சிறப்பு பள்ளிகளில் படித்து வந்த 192 குழந்தைகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:36 pm

DIN

கோவையில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட சிறப்பு பள்ளிகளில் படித்து வந்த 192 குழந்தைகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தேசிய குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை திட்ட இயக்குநா் விஜயகுமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா்களாக மீட்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த 192 குழந்தைகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேத்துமடை, கோவைப்புதூா், சுந்தராபுரம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் பெற்றோா்களுக்கு சிறப்பு கூட்டமும் நடத்தப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளதால் இதுவரையில் 100 குழந்தைகள் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மற்ற குழந்தைகளையும் பள்ளிகளில் சோ்ப்பதற்கு பெற்றோா்களுக்கு தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளின் நிலை குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்தக் குழந்தைகளும் மீண்டும் குழந்தை தொழிலாளா்களாக மாற்றப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்படுவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.