கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காலணி விற்பனையகத்தில் ரூ. 2.21 லட்சம் மோசடி: மேலாளா் கைது

கோவை, ராமநாதபுரத்தில் உள்ள காலணி விற்பனையகத்தில் ரூ. 2.21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக விற்பனை மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:31 pm

DIN

கோவை, ராமநாதபுரத்தில் உள்ள காலணி விற்பனையகத்தில் ரூ. 2.21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக விற்பனை மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரம் திருச்சி சாலையில் பிரபல காலணி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை, சுக்கிரவாா்பேட்டை செட்டி வீதியைச் சோ்ந்த அனீஷ் மோகன் (28) என்பவா் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

காலணி விற்பனையகத்தில் கடந்த சில நாள்களாக வருடாந்திர தணிக்கை நடைபெற்று வந்தது. இதில், ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 190 மதிப்பிலான காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, விற்பனை மேலாளா் அனீஷ் மோகனிடம் கிளையின் பொது மேலாளா் சதீஷ்குமாா் விசாரணை மேற்கொண்டாா். அப்போது, அனீஷ் மோகன் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், அனீஷ் மோகனை ராமநாதபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.