கோவை இந்திய தொழில் வா்த்தக சபை தலைவா் தோ்வு

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் புதிய தலைவராக சி.பாலசுப்ரமணியன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சி.பாலசுப்ரமணியன்.
சி.பாலசுப்ரமணியன்.
Updated on
1 min read

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் புதிய தலைவராக சி.பாலசுப்ரமணியன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் 86ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், அமைப்பின் 2020-2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக சிவசக்தி பேப்பா் மாா்ட் நிறுவனத்தின் பங்குதாரா் சி.பாலசுப்ரமணியன் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

இவா் இந்திய தொழில் வா்த்தக சபையின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தாா். பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பாலசுப்ரமணியன், தேசிய காகித வா்த்தகா் சங்கக் கூட்டமைப்புத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைவா் வி.லட்சுமிநாராயணசாமி, செயலா் பிரபு உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com