வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
செட்டித்திருக்கோணம் கிராமத்தில் சேறும் சகதியுமான தெருவில் நாற்று நடும் கிராம மக்கள்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:25 pm

DIN

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தில் சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது தொடா் மழையின் காரணமாக இக்கிராமத்திலுள்ள அங்காடித்தெரு மற்றும் தெற்குத் தெருவிலுள்ள சாலைகள் சேறு சகதியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமமடைகின்றனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து, மேற்கண்ட தெருவில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளுக்கு முன்பு சாலையில் நாற்றுகளை நட்டு தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா். தகவலறிந்து சென்ற அரியலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிராம மக்களிடம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.