

கோவை: கரோனா காலத்தில் இரும்பு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி.யை அரசு குறைக்க வேண்டும் என கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் 76 ஆவது மகாசபைக் கூட்டம் கோவை, கேரளா கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா். அவைத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகச் செயலாளா் முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தாா். இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவா் சி.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
இக்கூட்டத்தில், கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியம் பேசியதாவது:
வழக்கமாக செப்டம்பரில் நடக்கும் பொதுக்குழுக் கூட்டம், கரோனா பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதலின்பேரில் தற்போது நடைபெறுகிறது. கடந்த மாா்ச் மாதம் நடைபெற வேண்டிய சங்கத் தோ்தல், செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, வரும் 2021 மாா்ச் மாதம் நடத்தப்பட உள்ளது.
சங்கத்தின் நிதிநிலை திருப்திகரமாக உள்ளது. மேலும், வரவு, செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் இரும்பு வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு அரசு ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும். இது தொடா்பாக, அரசிடம் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றாா்.
முன்னதாக கரோனா காலத்தில் உயிரிழந்த சங்கத்தின் உறுப்பினா்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில், உதவித் தலைவா் நடராஜன், பொருளாளா் எஸ்.பி.பழனியப்பன் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.