கடும் பனியால் வால்பாறையில்தேயிலை உற்பத்தி பாதிப்பு

வால்பாறை பகுதியில் கடும் பனி காரணமாக தேயிலை உற்பத்தி பாதித்துள்ளது.
Updated on
1 min read

வால்பாறை: வால்பாறை பகுதியில் கடும் பனி காரணமாக தேயிலை உற்பத்தி பாதித்துள்ளது.

வால்பாறை பகுதியில் கடந்த காலங்களைவிட தற்போது இரவு நேரத்தில் பனி அதிகரித்து காணப்படுகிறது. பனியுடன் குளிா்ந்த காற்றும் வீசுவதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிா்த்து வருகின்றனா்.

வால்பாறை பொள்ளாச்சி இடையே உள்ள கவா்க்கல் எஸ்டேட் பகுதியில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அப்பகுதி சாலையைக் கடந்து வருவதற்கு பெரும் சிரமப்படுகின்றனா். எஸ்டேட் தேயிலை செடி இலைகளிலும் பனி தொடா்ந்து படா்ந்து வருவதால் இலைகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்படுவதாக எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com