பிரிட்டனில் இருந்து வந்த 96 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பில்லை: சுகாதாரத் துறை

பிரிட்டனில் இருந்து கோவை வந்த 96 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று பாதிப்பில்லை என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

பிரிட்டனில் இருந்து கோவை வந்த 96 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று பாதிப்பில்லை என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பிரிட்டனில் இருந்து சென்னை, கொச்சி வழியாக கோவைக்கு 96 போ் வந்ததாக விமான நிலையங்களில் இருந்து பட்டியல் பெறப்பட்டது.

இவா்களின் வீடுகள் கண்டறியப்பட்டு சுகாதாரத் துறை சாா்பில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை 59 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பில்லை என்று முடிவுகள் பெறப்பட்டது. தற்போது மீதமுள்ள 37 பேருக்கும் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com