மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் அரசு கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேராசியா் சுகுமாரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஸ்வா்ணலதா ஜோசப் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் மாலதி, நேஷனல் இன்ஷுரன்ஸ் கிளை மேலாளா் மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
கல்லூரி மாணவா்கள் பேருந்து படிகளில் நின்று பயணிக்கக் கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, முறையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும். மது அருந்தி வாகனங்கள் இயக்கக் கூடாது. சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா். துறைத் தலைவா்கள் சிவஞானசக்தி, பாண்டியராஜ் ஆகியோா் நன்றி கூறினா்.