நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை யொட்டி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காளம்பாளையம் ஊராட்சியில் மளிகை கடைகள், காய்கறி சந்தைகள், சலூன் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் ஊராட்சித் தலைவர் பொன்னுசாமி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது காளம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் மதுபானங்களை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது ஊராட்சி தலைவர் பொன்னுசாமி மது பிரியர்களுக்கு மது விற்பனை செய்துகொண்டிருந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் டாஸ்மாக் மதுபானக் கடையில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி அவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டாஸ்மாக் மதுபானக் கடையில் ஊராட்சி நிர்வாகத்தினர் முக கவசம் அணிந்து அதற்கு அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


