47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காந்தி பிறந்த நாள்: கூடலூர் பேரூராட்சியில் 2000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் பேரூராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 2000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. 

News image
கூடலூர் பேரூராட்சியில் 2000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா.
Updated On :2 அக்டோபர் 2020, 6:42 am

DIN

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் பேரூராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 2000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. 

கவுண்டம்பாளையத்திற்கு அருகே வெற்றிவேல் நகரில் நடந்த இதற்கு பெரியநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.குருந்தாசலம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் எஸ். நந்தகுமார் தலைமை வகித்து முதல்கட்டமாக சுமார் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்தார். 

தொடர்ந்து பொதுக் கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்துதல், பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரம், கரோனா தொற்று நோய் பரவுதலை தடுக்கும் வகையில் முகக் கவசங்கள் அணியாமல் இருத்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அலுவலகப் பணியாளர்கள், வெற்றிவேல் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர் படம் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.