கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கரோனா பாதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் மாநகராட்சியில் நோய்த் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மாநகராட்சியில் வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நடமாடும் வாகன கரோனா பரிசோதனை மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மண்டலத்துக்கு 4 வாகனங்கள் வீதம் 5 மண்டலங்களிலும் 20 நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பதிக்கப்பட்டவர்களை உண்டனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக கரோனா பாதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


