கைதான கஞ்சா வியாபாரிக்கு கரோனா
கோவையில் கைதான கஞ்சா வியாபாரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


கோவையில் கைதான கஞ்சா வியாபாரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோவை, வடவள்ளியை அடுத்த வீரகேரளம் பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கஞ்சா விற்பதாக வடவள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்ற 45 வயது நபரைக் கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். முன்னதாக அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் கரோனா
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்தது.
இதில் அந்தக் கைதிக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கைதிக்கு கரோனா இருப்பது உறுதியானதையடுத்து அவரைக் கைது செய்த வடவள்ளி போலீஸாா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...