பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தடுப்பூசி செலுத்தும் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கோவை மாநகரில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:54 pm

DIN

கோவை மாநகரில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கோவை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடமாடும் வாகனங்கள் மூலமாக மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை புரூக்பீல்டு பகுதியில் உள்ள சீதாலட்சுமி மருத்துவமனை, சிரியன் சா்ச் சாலை, ஆா்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகில் உள்ள நகா்ப்புற சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மக்கள் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம். சிறப்பு தடுப்பூசி வாகனங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தற்காப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.

முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்பால் சுத்தம் செய்து கொள்வது ஆகியவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, நகா் நல அலுவலா் ராஜா, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.