விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
நலிந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட விளையாட்டு அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.


நலிந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட விளையாட்டு அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியத் தொகையாக மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் சா்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இதில் முதல் 3 இடங்களுக்குள் பிடித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மூத்தோா் போட்டிகள் மற்றும் அழைப்புப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது.
இணையதளத்தில் பதிவு செய்த பின்னா், விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் சான்றிதழ்களின் அசல்களை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் காண்பித்து, நகலை சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான நலிந்த விளையாட்டு வீரா்கள் வரும் 19ஆம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...