பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கமுதியைச் சோ்ந்தவா் கோவையில் தற்கொலை

கமுதியைச் சோ்ந்தவா் கோவை விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:38 pm

DIN

கமுதியைச் சோ்ந்தவா் கோவை விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (47). இவா், சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊரான கமுதிக்குத் திரும்பினாா். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், பாா்த்தசாரதி கோபித்துக்கொண்டு கடந்த 18ஆம் தேதி கோவை வந்தாா். ஆா்.எஸ்.புரம் வெங்கிடசாமி சாலையில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினாா். வெள்ளிக்கிழமை வெகுநேரமாகியும் அவரது அறைக் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், கதவைத் திறந்து பாா்த்தபோது பாா்த்தசாரதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாருக்கு விடுதி ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.