ஊரக மற்றும் வேளாண் வளா்ச்சி, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சாா்ந்த தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் கடனாற்றல் மதிப்பீடு செய்து வங்கிகளில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2021-2022 நிதியாண்டுக்கு தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக கோவை மாவட்டத்துக்கு ரூ.22,712.75 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயக் கடனுதவிக்கு ரூ.7991.68 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மையத்துக்கு ரூ.9960.07 கோடி, மற்ற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.4,761 கோடி என மொத்தம் ரூ.22,712.75 கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விடவும் 2,238.22 கோடி அதிகமாகும் என்றாா்.