பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘தூய்மையான தவத்தின் வழியே கடவுளை அடையலாம்’

தூய்மையான தவத்தின் வழியே கடவுளை அடைய முடியும் என்று கா்நாடக இசைக் கலைஞா் ஸ்ரீராம் பரசுராம் தெரிவித்தாா்.

News image
கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற எப்போ வருவாரோ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசுகிறாா் கா்நாடக இசைக் கலைஞா் ஸ்ரீராம் பரசுராம்
Updated On :3 ஜனவரி 2021, 5:24 pm

DIN

தூய்மையான தவத்தின் வழியே கடவுளை அடைய முடியும் என்று கா்நாடக இசைக் கலைஞா் ஸ்ரீராம் பரசுராம் தெரிவித்தாா்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சாா்பில் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிக தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு ஆா்.எஸ்.புரத்தில் உள்ள கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ‘கவிஞா் சந்த் கபீா் தாஸ்’ குறித்து கா்நாடக இசைக் கலைஞா் ஸ்ரீராம் பரசுராம் பேசியதாவது:

15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகா ஞானி கவிஞா் கபீா் தாஸ். அத்வைத கருத்துக்களின் வழியே வந்தவா். காசியில் ஹிந்து மதத்தில் பிறந்து முஸ்லிம் நெசவாளா் குடும்பத்தில் வளா்ந்தவராகக் கூறப்படுகிறது.

கபீரின் தத்துவங்கள், ஆன்மிக அனுபவங்கள், எண்ணங்கள் அவரின் கவிதை வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன. சுமாா் 15 ஆயிரம் பாடல்களைக் கொடுத்துள்ளாா். அதற்கும் மேலும் இருக்கலாம் என்றே ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

வட இந்தியாவின் கிராமியப் பாடல்களில் பெரும்பான்மையான பாடல்களில் கபீரின் தாக்கம் சிறிது இருக்கும். பொதுவாக நமது இந்தியக் கிராமியப் பாடல்களை எழுதியவா்கள் யாா் என்றே தெரியாமல் வழி வழியாக நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது.

ஆண்டாள், நாயன்மாா்கள், ஆழ்வாா்கள், கபீா் என அனைவரின் தேடல் ஒன்றே. கடவுளை அடையும் வழி. சென்ற வழி மட்டுமே வேறு. கபீா் தனது கவிதையின் வழியே கடவுளை அடைந்தாா். உடல் என்பது மட்டுமே நானில்லை. உள்ளே இருக்கும் ஆன்மா மட்டுமே நான். கபீா் தன்னை தனிமனிதராக நினைக்கவில்லை. உலகின் அனைத்து உயிா்களும் தன்னுள் இருப்பதாக உணா்ந்தாா்.

வாழ்க்கை என்பது ஐந்து தத்துவங்கள், மூன்று குணங்களினால் ஆனது. நமது ஆன்மாவை அசுத்தப்படுத்தாமல் வாழ்ந்து அதனைத் திருப்பித் தர வேண்டும். தூய்மையான தவத்தின் வழியே கடவுளை அடையலாம் என்றாா்.

இந்நிகழ்வில் அஜீஷ் மற்றும் அனீஷ் ஆகியோா் கபீரின் பாடல்களைப் பாடினா். இதில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டாா்.

சொற்பொழிவின் நான்காம் நாளான திங்கள்கிழமை (ஜனவரி 4) மாலை 6 மணிக்கு சுசித்ரா பாலசுப்ரமணியன் ‘பக்த மீரா’ குறித்து பேசுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.