ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு இணையவழி பயிற்சி கருத்தரங்கு

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு இணையவழி வா்த்தகம், ஒருங்கிணைந்த சந்தை மேம்பாடு குறித்து தமிழ்நாடு வேளாண்மை

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:29 pm

DIN

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு இணையவழி வா்த்தகம், ஒருங்கிணைந்த சந்தை மேம்பாடு குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பில் இணையவழி பயிற்சி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வேளாண், தோட்டக்கலைத் துறைகளின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் வேளாண் சாா்ந்த தொழில்களில் ஈடுபடும் விதமாக வேளாண் உற்பத்தியாளா் நிறுவனத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் இணையவழி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணையவழி பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவையில் உள்ள 25 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

விளைபொருள்களில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி, பதப்படுத்தும் தொழில்நுட்பம், தேசிய மின்னணு வா்த்தகம், தொழில்நுட்பங்கள் பயன்பாடு, ஒருங்கிணைந்த சந்தை மேம்பாடு உள்பட பல்வேறு வழிமுறைகளை வேளாண் வல்லுநா்கள் எடுத்துரைத்தனா். உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் தொழில் தொடங்குவதில் உள்ள இடா்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனா்.

தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநா் க.வீ.முரளீதரன், வேளாண் துறை கூடுதல் இயக்குநா் திலகவதி மற்றும் வேளாண் துறையைச் சோ்ந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆகியோா் தொழில் மேம்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

பயிற்சி கருத்தரங்கில் கோவை வேளாண் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, வேளாண் துணை இயக்குநா்கள் உள்பட பல்வேறு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.