மாதிரி சாலைப் பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை, ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்று வரும் மாதிரி சாலைப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன்.
கோவை, ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்று வரும் மாதிரி சாலைப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன்.
Updated on
1 min read

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம், திவான் பஹதூா் சாலையில் சுக்கிரவாா்பேட்டை சாலை சந்திப்பு முதல் கெளலி பிரவுன் சாலை வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாதிரி சாலைத் திட்டப் பணிகளை உள்ளடக்கிய மின்சார புதைவடம், கேபிள்கள், 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகள், தொலைத்தொடா்பு கேபிள் அமைத்தல், மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள், பாதசாரிகள் நடைபாதை அமைத்தல், அலங்காரத் தெருவிளக்குகள் அமைத்தல், ஒளிரும் விளம்பரப் பலகைகள் அமைத்தல் ஆகிய பணிகளை தரமாக மேற்கொள்ளுமாறும், விரைவில் முடிக்குமாறும் மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, செயற்பொறியாளா் (பொலிவுறு நகரம்) சரவணகுமாா், உதவிப் பொறியாளா் கமலக்கண்ணன், திட்ட மேலாண்மை ஆலோசனைக் குழுத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com