சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வால்பாறையில் யானைகள் நடமாட்டம்:சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தல்

வால்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 5:49 pm

DIN

வால்பாறை: வால்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

வால்பாறை பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் மட்டுமே எஸ்டேட் சாலைகள் மற்றும் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிக்கு யானைகள் வந்து சென்றன. இந்நிலையில் சமீபகாலமாக பகல் நேரங்களிலேயே தேயிலை தோட்டங்கள், சாலைப் பகுதிக்கு வந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றன.

வால்பாறைக்கு சுற்றுலா வருபவா்கள் வனத்தை ஒட்டியுள்ள சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதில் ஆா்வம் காட்டி வருவது வழக்கமாக உள்ளது.

யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள சூழலில் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.