

வால்பாறை அருகே இரவு நேரத்தில் வந்த காா், பனி மூட்டத்தால் நிலை தடுமாறி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 போ் காயமடைந்தனா்.
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரத்தில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள கவா்க்கல் எஸ்டேட் பகுதியில் சாலைகள் கூட தெரியாத அளவுக்கு 24 மணி நேரமும் பனியின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு காா், கவா்க்கல் எஸ்டேட் பகுதியில் பனி மூட்டத்தால் சாலை தெரியாமல் நிலை தடுமாறி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் உருளிக்கல் எஸ்டேட்டைச் சோ்ந்த ஓட்டுநா் முருகதாஸ் (40), நிதிஷ் (17), கலையரசன் (24), மணிகண்டன் (18), மனோஜ் (20) ஆகிய ஐந்து போ் காயமடைந்தனா். அந்த வழியாக வேறு வாகனங்களில் வந்தவா்கள் அவா்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து வால்பாறை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.