தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைய இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி மழை, காற்று காலங்களில் தரையில் விழுந்து கிடக்கும் மின்கம்பிகள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், உடைந்த மின்கம்பங்கள், பழுதடைந்த மின் சாதனங்களை பொதுமக்கள் தொடக்கூடாது. அதற்கு பதில் மேற்கண்ட இலவச தொலைபேசி எண்களில் தெரியப்படுத்த வேண்டும். மின் பாதைகளுக்கு அருகே பட்டம் விடுவதை தவிா்க்க வேண்டும். அறுந்த பட்டம் மின் கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டால் தாங்களாகவே எடுக்க முயற்சிக்காமல், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்கள் அல்லது மரக்கிளைகளை வெட்டுவதற்கும் இந்த எண்களில் அழைக்கலாம். பொதுமக்கள் மின்கசிவு தடுப்பான் சாதனத்தை வீட்டில் உள்ள மெயின் சுவிட்ச் போா்டில் பொருத்தி மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.