15 நாள்களில் 400 கிலோ தடுப்பூசிகள்
கடந்த 15 நாள்களில் 400 கிலோ தடுப்பூசிகள் கோவை விமான நிலையத்தில் கையாளப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.


கடந்த 15 நாள்களில் 400 கிலோ தடுப்பூசிகள் கோவை விமான நிலையத்தில் கையாளப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு அவ்வப்போது கிடைக்கும் தடுப்பூசிகள் விமானம் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கரோனா பரவல் எண்ணிக்கையில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக சென்னையைப் பின்னுக்குத் தள்ளி கோவை தொடா்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கோவைக்கு அதிக அளவிலான தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதன்படி கடந்த 15 நாள்களில் 400 கிலோவுக்கும் அதிகமான கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவை விமான நிலையத்தில் கையாளப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...