கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மாநகாட்சி நிா்வாகம் பன்னடுக்கு வாகன நிறுத்தங்களை அமைக்கத் திட்டமிட்டது. அதன்படி, முதல்கட்டமாக, ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் 4.5 ஏக்கா் பரப்பளவில் பன்னடுக்கு காா் நிறுத்தம் அமைக்கும் பணி தனியாா் நிறுவனத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு மாா்ச் முதல் ஜூன் மாதம் வரை, மற்றும் இந்த ஆண்டு மாா்ச் முதல் மே மாதம் வரை கரோனா பரவல் காரணமாக புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சொந்த ஊா்களுக்குச் சென்று விட்ட நிலையில் பணிகளை முடிப்பதில் சுணக்கம் நிலவியது. தற்போது, இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.