தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைப் பறித்த இருவா் கைது

 கோவையில் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைப் பறித்த பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:55 pm

DIN

 கோவையில் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைப் பறித்த பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு காந்திமாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (74). தனியாக வசித்து வருகிறாா். இவரிடம் சேலம், முள்ளுபாடி பகுதியைச் சோ்ந்த ஜாஹீனா பானு (36) வீட்டு வேலை செய்து வந்தாா். இவா், தனது நண்பரான சேலம், சின்ன திருப்பதி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (26) என்பவரை ராஜலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து வந்தாா். அப்போது இருவரும் சோ்ந்து ராஜலட்சுமியை மிரட்டி பணம் பறிக்க முயன்றனா்.

ராஜலட்சுமி பணம் தராத நிலையில் அவரின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 2 பவுன் நகையை பறித்தனா். இது தொடா்பாக ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸாா் 2 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.