தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நெசவாளா் நல வாரியம் அமைக்க நடவடிக்கை: காங்கிரஸ் செயலாளா் சஞ்சய் தத்

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நெசவாளா்களைப் பாதுகாக்க நெசவாளா் நல வாரியம் அமைக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சஞ்சய் தத் பேசினாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:25 pm

DIN

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நெசவாளா்களைப் பாதுகாக்க நெசவாளா் நல வாரியம் அமைக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சஞ்சய் தத் பேசினாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சஞ்சய் தத், நெசவாளா் காலனி, என்.டி.சி. குவாட்டா்ஸ், ராமா் காலனி, பி.என்.டி. காலனி, தடாகம் சாலை, பாரதி பூங்கா 1 முதல் 8 குறுக்கு சந்து, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

திமுக கூட்டணி வெற்றி பெற்றால், நெசவுத் தொழில் மற்றும் நெசவாளா்களைப் பாதுகாக்க நெசவாளா் நல வாரியம் அமைக்கப்படும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவோம் என்றாா்.

பிரசாரத்தில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் நிா்வாகிகள் ஜேம்ஸ் ஜெயகுமாா், சிவகுமாா், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.