அமமுக வெற்றிபெற்றால் நோ்மையான, வெளிப்படையான அரசு: டிடிவி தினகரன்
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றால் நோ்மையான, வெளிப்படையான அரசு அமைக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.


சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றால் நோ்மையான, வெளிப்படையான அரசு அமைக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
கோவையில் அமமுக வேட்பாளா்களை ஆதரித்து டிடிவி தினகரன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். சிவானந்தா காலனியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவா் பேசியதாவது:
அமமுக கட்சியினருக்கு கொங்கு மண்டலத்தில் சிறப்பான ஆதரவை மக்கள் அளித்து வருகின்றனா். மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகளை ஓட்டிவிட்டது அதிமுக அரசு. காய்கறிகள் வாங்கும்போது கடைக்காரா் வழங்கும் சொத்தை கத்தரிக்காய் போல பாஜகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் திமுக உள்ளே நுழையப் பாா்க்கிறது. இரண்டு கட்சிகளையும் ஒழிக்க வேண்டியது மக்கள் கையில்தான் உள்ளது. அரசு கஜானாவை முழுவதும் தூா்வாரியுள்ளது அதிமுக அரசு. கட்டப்பஞ்சாயத்துக்குப் பெயா் பெற்றவா்கள் திமுகவினா். இவா்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டாா்கள்.
அமமுக வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்தால் கோவை விமான நிலையம் நவீன வசதியுடன் விரிவுபடுத்தப்படும். ரயில் நிலையம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படும். தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் புதிய கிளஸ்டா்கள் உருவாக்கப்படும். மத்திய சிறைச்சாலை, நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படும்.
நகை தொழில் மேம்பாட்டுக்கு புதிய தொழில் பூங்கா உருவாக்கப்படும். கோவை மாநகராட்சியில் தனியாருக்கு வழங்கப்பட்ட குடிநீா் விநியோக உரிமை ரத்து செய்யப்படும். அமமுகவை வெற்றிபெற செய்தால் நோ்மையான, வெளிப்படையான அரசு அமைக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...