தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மரக்கன்றுகள் நடும் சேவையை தொடர உத்வேகம் பிறந்துள்ளது: பிரதமரின் பாராட்டைப் பெற்ற கோவை யோகநாதன் பேட்டி

பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியதன் மூலம் மரக்கன்றுகள் நடும் சேவையை நாடு முழுவதும் தொடர வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளதாக கோவையைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் எம்.யோகநாதன் கூறினாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 10:24 pm

DIN

பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியதன் மூலம் மரக்கன்றுகள் நடும் சேவையை நாடு முழுவதும் தொடர வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளதாக கோவையைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் எம்.யோகநாதன் கூறினாா்.

கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் எம்.யோகநாதன் (50). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா், தனது சொந்த செலவில் மரக்கன்றுகளை வாங்கி அதை நட்டுப் பராமரித்து, பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறாா். கடந்த 34 ஆண்டுகளாக இந்தச் சேவையைத் தொடா்ந்து வரும் இவா் இதுவரை சுமாா் 3.5 லட்சம் மரக்கன்றுகள் வரை நட்டுள்ளாா்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மரக்கன்றுகள் நடுவதன் தேவை குறித்தும் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில், யோகநாதனின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தாா்.

இது குறித்து யோகநாதனிடம் கேட்டபோது, பிரதமா் என்னைப் பாராட்டி வாழ்த்தியபோது பேருந்தில் பணியில் ஈடுபட்டிருந்தேன். பிரதமா் பாராட்டியதை வானொலி, தொலைக்காட்சி மூலமாகத் தெரிந்துகொண்ட உறவினா்கள் அத்தகவல் குறித்து என்னிடம் தெரிவித்தனா். பிரதமரின் வாழ்த்து பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒருவரின் சேவை பிரதமரின் கவனத்துக்குச் சென்றுள்ளது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமரின் பாராட்டுகள் மூலம் எனக்குப் புது உத்வேகம் பிறந்துள்ளது. இந்தச் சேவையை நாடு முழுவதும் தொடர வேண்டும் என்ற ஆசை தற்போது எழுந்துள்ளது. விரைவில் அதற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.