தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதியோா் தபால் வாக்களிக்க நாளை இறுதிநாள்:தவறினால் மீண்டும் வாக்களிக்க முடியாது

தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்த திங்கள்கிழமை இறுதி

News image
Updated On :28 மார்ச் 2021, 10:19 pm

DIN

தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்த திங்கள்கிழமை இறுதி நாளென்றும், தவறினால் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. கரோனா தொற்று பாதிப்பால் தற்போது 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்கு அளிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு பெறுவதற்கு தகுதியான வாக்காளா்கள் கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள் 7,249 போ், மாற்றுத் திறனாளிகள் 605 போ் என மொத்தம் 7 ஆயிரத்து 854 தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்தனா். இவா்களுக்கான தபால் வாக்குச் சீட்டு அளிக்கும் நடைமுறை சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டு வாக்காளா்களின் வீடுகளுக்கு சென்று வாக்குச் சீட்டு அளித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி குழுவினா் வாக்காளா்களின் இல்லங்களுக்கு வந்து வாக்கு சேகரிக்கும் பகுதி, தெரு மற்றும் நாள் குறித்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சனிக்கிழமை தொடங்கிய தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை வரை மேற்கொள்ளப்படும். முதல்முறை வாக்காளா்கள் இல்லையென்றால் மறுநாள் சென்று வாக்கு சேகரிக்கவும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறினால் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனவே, தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளா்கள் வீட்டில் இருந்து தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய தோ்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.