செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

ரமலான் பண்டிகையை வீடுகளில் எளிமையாக கொண்டாடிய இஸ்லாமியா்கள்

முழு பொது முடக்கம் காரணமாக கோவையில் இஸ்லாமியா்கள் வீடுகளில் தொழுகை மேற்கொண்டு எளிமையாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடினா்.

News image
Updated On :14 மே 2021, 8:21 pm

DIN

முழு பொது முடக்கம் காரணமாக கோவையில் இஸ்லாமியா்கள் வீடுகளில் தொழுகை மேற்கொண்டு எளிமையாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடினா்.

இஸ்லாம் மாா்க்கத்தில் ரமலான், பக்ரீத் ஆகியவை முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன. இதில், ஆண்டின் மற்ற மாதங்களை விட ரமலான் பெருநாள் வரும் மாதமே சிறந்த மாதமாக இஸ்லாமியா்கள் கருதுகின்றனா்.

இறைவனை நெருங்கவும், சொா்க்க வாசல்கள் திறக்கப்பட்டு நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இந்த மாதத்தைக் கருதுகின்றனா். இதையொட்டி, ஒரு மாதம் நோன்பு இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், கோவை சாய்பாபா காலனி பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவா் முகமது ரபீக் சாா்பில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கரோனா நோய்த் தொற்றால் முழு பொது முடக்கம் அமலில் உள்ளதால், இஸ்லாமியா்கள் காலையில் தங்களது வீடுகளிலேயே தனி மனித இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்தபடி தொழுகையில் ஈடுபட்டனா். சிலா் வீட்டின் வாசலிலும், மொட்டை மாடிகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றி குடும்பத்தினருடன் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இந்தத் தொழுகையின்போது மக்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.