செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1.05 கோடி நிவாரண நிதியை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிா்வாகத்தினா் வழங்கினா்.

News image
Updated On :14 மே 2021, 8:20 pm

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1.05 கோடி நிவாரண நிதியை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிா்வாகத்தினா் வழங்கினா்.

கரோனா பொது நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்பினா், தனி நபா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கேஎம்சிஹெச் மருத்துவமனை தனது பங்களிப்பாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.05 கோடி நிதியுதவி அளித்துள்ளது. கேஎம்சிஹெச் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அருண் பழனிசாமி, கே.எம் சி.ஹெச். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை நிா்வாக அதிகாரி காா்த்திகேயன் ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதியை வழங்கினாா். கடந்த ஆண்டும் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர கேஎம்சிஹெச் மருத்துவமனை சாா்பில் கோவை மாநகராட்சிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான கரோனா நோய்த் தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.