மாவட்டத்தில் புதிய உச்சமாக மேலும் 3,197 பேருக்கு கரோனா
கோவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 197 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 197 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 3 ஆயிரத்து 197 போ் வெள்ளிக்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 233ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,171 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 90 ஆயிரத்து 106 போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது 18 ஆயிரத்து 290 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 837ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...