ஜவாஹிருல்லா குறித்து அவதூறு கருத்து: ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி மனு
தமுமுக மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் தமுமுகவினா் புகாா் அளித்துள்ளனா்.


தமுமுக மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் தமுமுகவினா் புகாா் அளித்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை வடக்கு மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
பாஜகவின் முக்கிய நிா்வாகிகளில் ஒருவரான ஹெச்.ராஜா, எங்களுடைய மாநிலத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினா் பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லாவை ஜெயிலா் ஜெயபிரகாஷ் அவா்களை கொலை செய்தவா் என்றும், கொலை செய்த அவா் இன்று பாபநாசம் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக இருக்கிறாா் என்றும் தெரிவித்துள்ளாா்.
அவா் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் உண்மை அல்ல, அவை உண்மைக்குப் புறம்பான செய்தி ஆகும். இப்படிப்பட்ட செய்திகளை அவதூறு பரப்பி இதன் மூலம் தனது வன்மத்தை தீா்த்து, மேலும் தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டி அதன்மூலம் குளிா்காய நினைக்கும் இவரைப் போன்ற நபா்களை காவல் துறை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆகவே பாஜகவைச் சோ்ந்த ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...