செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

விதிமீறல்: 3 உணவகங்களுக்கு ‘சீல்’

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே விதிமீறி செயல்பட்டதாக 3 உணவகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :21 மே 2021, 9:12 pm

DIN

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே விதிமீறி செயல்பட்டதாக 3 உணவகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காய்கறி, இறைச்சி, மளிகைக் கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

பால் நிலையங்கள், மருந்தகங்கள் மட்டும் முழு நேரம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பாா்சல்கள் மட்டும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள சில உணவகங்கள் விதிமீறி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் வந்தது.

இதையடுத்து, ஆட்சியா் எஸ்.நாகராஜன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரிகள் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை பீளமேடு, வரதராஜபுரம், ராமானுஜ நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே காமராஜா் சாலையில் உள்ள 3 உணவகங்களின் முன்பாக மக்கள் கூட்டமாக சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அக்கடைகளில் மேற்கொண்ட ஆய்வில், கரோனோ விதிமீறி வாடிக்கையாளா்களை சாப்பிட அனுமதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 3 உணவகங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.