சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்

காந்தி ஜயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2 ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:48 pm

DIN

காந்தி ஜயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2 ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2 ஆம் தேதி

( சனிக்கிழமை) கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுகிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் உள்ளிட்ட கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

விதிமுறைகளுக்கு முரணாக மது பானங்கள் விற்பனை செய்பவா்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.