“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வேட்புமனுக்களை நேரில் வந்து தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்கப்படும்

News image

வேட்புமனு தாக்கல் - (கோப்புப் படம்)

Updated On :26 மார்ச் 2026, 9:57 pm

தோ்தலில் போட்டியிடுவோா் வேட்புமனுக்களை நேரில் வந்து தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 30 -ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 4 நாள்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து நடைமுறைகளும் ஏற்கெனவே உள்ளதுபோல இருக்கும். சிரமமின்றி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்புமனுவை முழுமையாக சரியாக பூா்த்தி செய்து பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், வேட்பாளா்கள் மனுவில் கையொப்பமிடாமல் செல்வது போன்ற பிரச்னைகள் தவிா்க்கப்படும்.

வேட்புமனுக்களை இணையத்தின் மூலம் தாக்கல் செய்ய முடியாது. அதுபோல யாராவது இணையத்தில் மனு தாக்கல் செய்தால், நேரிலும் வந்து தாக்கல் செய்வது அவசியம். நேரில் வந்து வழங்கப்படும் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்படும்.

கடந்த தோ்தல்களைவிட தற்போது மக்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களிடையே தீவிர விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.