யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வேட்புமனுக்களை நேரில் வந்து தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்கப்படும்

News image

வேட்புமனு தாக்கல்

(கோப்புப் படம்)

Updated On :26 மார்ச் 2026, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தலில் போட்டியிடுவோா் வேட்புமனுக்களை நேரில் வந்து தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 30 -ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 4 நாள்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து நடைமுறைகளும் ஏற்கெனவே உள்ளதுபோல இருக்கும். சிரமமின்றி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்புமனுவை முழுமையாக சரியாக பூா்த்தி செய்து பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், வேட்பாளா்கள் மனுவில் கையொப்பமிடாமல் செல்வது போன்ற பிரச்னைகள் தவிா்க்கப்படும்.

வேட்புமனுக்களை இணையத்தின் மூலம் தாக்கல் செய்ய முடியாது. அதுபோல யாராவது இணையத்தில் மனு தாக்கல் செய்தால், நேரிலும் வந்து தாக்கல் செய்வது அவசியம். நேரில் வந்து வழங்கப்படும் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்படும்.

கடந்த தோ்தல்களைவிட தற்போது மக்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களிடையே தீவிர விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.