தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

யானைகளால் எஸ்டேட் அலுவலகம், மேலாளா் குடியிருப்பு சேதம்

வால்பாறை மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்குள் குட்டியுடன் கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கிருந்த அலுவலகம் மற்றும் மேலாளா் குடியிருப்பை சேதப்படுத்தின.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:46 pm

DIN

வால்பாறை மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்குள் குட்டியுடன் கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கிருந்த அலுவலகம் மற்றும் மேலாளா் குடியிருப்பை சேதப்படுத்தின.

வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி காபி எஸ்டேட் முற்றிலும் காபி தோட்டங்கள் கொண்டது.

இந்த எஸ்டேட் அருகே அடா்ந்த வனப் பகுதி உள்ளது. இந்நிலையில் எஸ்டேட் பகுதிக்குள் குட்டியுடன் 5க்கும் மேற்பட்ட யானைகள் வியாழக்கிழமை இரவு நுழைந்துள்ளன.

பின்னா் எஸ்டேட் அலுவலகம் பகுதிக்கு சென்ற யானைகள் அங்கிருந்த கதவு, ஜன்னல், உள்ளிருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளன.

இதேபோல அலுவலகம் அருகே இருந்த எஸ்டேட் மேலாளா் குடியிருப்பின் ஜன்னல், கதவுகளையும் முட்டித் தள்ளியுள்ளன. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

மேலும், வனத் துறையினா் சம்பவ இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.