காருண்யா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
கோவை காருண்யா நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


கோவை காருண்யா நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படியும், காருண்யா நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தா் பால் தினகரனின் ஆலோசனையின்படியும், ஃபிட் இந்தியா ஃப்ரீடம் இயக்கத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் போட்டிகள் காருண்யாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
போட்டிகளை பல்கலைக்கழக மாணவா் நலன் இயக்குநா் அல்போன்ஸ் ராஜ், சீஷா தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநா் சாமுவேல் தாமஸ், மனநல மருத்துவா் ஷீலா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதில் கிரிக்கெட், கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் வெற்றி பெற்றவா்களுக்கு பதிவாளா் எலைஜா பிளசிங் பரிசு வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித் துறை இயக்குநா் காலேப் ராஜன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...