எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பாறைகுழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: கடையடைப்பு, காத்திருப்புப் போராட்டம்

அவிநாசி அருகே அம்மாபாளையம் கணபதி நகர் பகுதி பாறைகுழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை கடையடைப்பு செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
கோயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
Updated On :20 செப்டம்பர் 2021, 9:38 am

DIN

அவிநாசி: அவிநாசி அருகே அம்மாபாளையம் கணபதி நகர் பகுதி பாறைகுழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை கடையடைப்பு செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையம் 11வது வார்டு கணபதி நகர், கானக்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் விவசாயிகள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பாறைகுழியில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய்த் தொற்று அபாயம் ஏற்படும். மேலும் நிலத்தடி நீர் மாசுபடும் எனக் குறி பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்தம் வேண்டும் என கோரி துறை நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ஆத்திமடைந்த பொதுமக்கள், அம்மாபாளையம் பகுதியில் கடையடைப்பு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். 

இதையறிந்த திருமுருகன்பூண்டி காவலர்கள் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இருப்பினும் திங்கள்கிழமை காலை கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, இரு நாள்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Story image

இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் அருகிலுள்ள மாகாளியம்மன் கோயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு மீண்டும் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டக் குழுவினர் காதிருப்புப் போராட்டத்தை கைவிட்டு, மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதாக முடிவு செய்து கலைந்து சென்றனர். இதனால் அம்மாபாளையம் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.