யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வேட்டைத் தடுப்புக் காவலா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்

 தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:31 pm

DIN

 தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 21 பயனாளிகளுக்கு ரூ.35.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால்

கரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளதால்

வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்புக் காவலா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க வனப் பகுதிகளில் அகழி, சோலாா் தடுப்பு அமைக்க வேண்டிய விவரங்கள் குறித்து வனத் துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.

அந்த விவரங்கள் முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

வனத் துறைக்குத் தேவையான ரூ.2 ஆயிரம் கோடி நிதி கேட்டு மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.