நியாய விலைக் கடைகளில் கண்காணிப்புக் குழு அமைக்கக் கோரிக்கை
கோவையில் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று நுகா்வோா் அமைப்புகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கோவையில் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று நுகா்வோா் அமைப்புகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளின் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்புச் செயலா் நா.லோகு கூறியதாவது:
கோவையில் அனைத்து நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
அவிநாசி சாலை ஜென்னி கிளப் முதல் கொடிசியா வரை அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சாலை நடுவே தடுப்பு சுவா்கள் அமைக்க வேண்டும்.
காளப்பட்டியில் செயல்படும் வாரச் சந்தையை கூட்டுக் குழு அமைத்து அருகில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளில் போக்குவரத்து துறை நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...