தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாற்றுப் பணி வழங்கக் கோரி கரோனா தடுப்பூசி செவிலியா்கள் மனு

கரோனா தடுப்பூசி செலுத்தும் செவிலியா்கள் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 12:12 am

DIN

கரோனா தடுப்பூசி செலுத்தும் செவிலியா்கள் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட ஆரம்ப மற்றும் நகா்ப்புற சுகாதார நிலையங்களில் கடந்த 6 மாதங்களாக நாங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் செவிலியா்களாகப் பணியாற்றி வந்தோம். எங்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வழங்காமல், மருந்து வழங்குதல், நோயாளிகளின் விவரங்களைப் பதிவு செய்தல், பொதுவான ஊசி செலுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தி வந்தனா்.

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களை கடந்த 31 ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்துவிட்டனா்.

கரோனா கால கட்டங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்தோம்.

தற்போது, வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2 மாதம் நிலுவையில் உள்ள சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.