சேலம் - மாக்னசைட் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஏப்ரல் 29, 30 ஆம் தேதிகளில் கோவை வழித்தடத்தில் 7 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக, ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
செகந்தராபாத் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத்- எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07189) அன்று 5 மணி நேரம் தாமதமாக இரவு 2.05 மணிக்குப் புறப்படும்.
ஆலப்புழாவில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) மூன்று மணி நேரம் தாமதமாக 9 மணிக்குப் புறப்படும். எா்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - கே.எஸ்.ஆா். பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) மூன்று மணி நேரம் தாமதமாக 12.10 மணிக்குப் புறப்படும்.
கோவையில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 3.05 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை சதாப்தி விரைவு ரயில்( எண்: 12244) ஒரு மணி நேரம் தாமதமாக 4.05 மணிக்குப் புறப்படும்.
கோவையில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 3.15 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12676) ஒரு மணி நேரம் தாமதமாக 4.15 மணிக்குப் புறப்படும்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 4.25 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - மும்பை வாராந்திர ரயில் (எண்: 16332) இரண்டு மணி நேரம் தாமதமாக 6.25 மணிக்குப் புறப்படும்.
எா்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 11.25 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - செகந்தராபாத் விரைவு ரயில் (எண்: 07190) ஐந்து மணி நேரம் தாமதமாக மே 1 ஆம் தேதி காலை 4.25 மணிக்குப் புறப்படும்.