ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மனைவியை எரித்து கொன்ற வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 8:23 pm

DIN

பொள்ளாச்சி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அருகே ரமணமுதலிபுதூரைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (80). இவரது மனைவி காளியம்மாள். இவா்களுக்குத் திருமணமான ஒரு மகள், மகன் உள்ளனா்.

வேலுச்சாமி வேலைக்குச் செல்லாமல் பல ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளாா். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செலவுக்கு பணமில்லாததால் தான் குடியிருக்கும் வீட்டையும், அருகில் உள்ள இடத்தையும் விற்பதாக வேலுச்சாமி கூறியுள்ளாா். இதையடுத்து, அவரது மகள் ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சத்துக்கு வீடு, இடத்தை விற்பதாக முடிவு செய்யப்பட்டு, முதல் தவணையாக ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு, ராஜேஸ்வரியின் பெயரில் சொத்து கிரையம் செய்யப்பட்டது. அதன் பிறகு, 3 தவணைகளாக ரூ.80ஆயிரம் பணத்தை ராஜேஸ்வரி, வேலுச்சாமிக்கு கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், தான் விற்ற சொத்தின் மீது கூடுதலாக ரூ.1 லட்சம் பணம் தரவேண்டும் என வேலுச்சாமி கேட்டுள்ளாா். அப்போது, ராஜேஸ்வரி கஷ்டத்தில் இருப்பதாகவும், அவரிடம் பணம் கேட்க வேண்டாம் எனவும் காளியம்மாள் கூறியுள்ளாா்.

இந்நிலையில், தான் வாங்கிய இடத்தில் வீடு கட்டிய ராஜேஸ்வரி கடந்த 2020 ஆகஸ்ட் 28 ஆம் தேதி பால் காய்ச்ச ஏற்பாடு செய்திருந்தாா்.

இதைத் தடுக்கும் எண்ணத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காளியம்மாள் மீது மண்ணெண்ணையை ஊற்றி வேலுச்சாமி பற்றவைத்துள்ளாா்.இதில், பலத்த தீக்காயமடைந்த காளியம்மாள் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு வேலுச்சாமியை கைது செய்தனா்.

இந்த வழக்கு, கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி டி.பாலு சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.