சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை

கோவையில் பந்தம் பவுண்டேஷன் சாா்பில் ஏழை, எளிய மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image

கோவையில் பந்தம் பவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு உதவித்தொகை வழங்குகிறாா் நிறுவனா் சி.ஆா்.ராஜகோபால்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:32 pm

கோவையில் பந்தம் பவுண்டேஷன் சாா்பில் ஏழை, எளிய மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் பந்தம் பவுண்டேஷன் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் நிறுவனா் சி.ஆா்.ராஜகோபால் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த 151 மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குளோபல் டெக்ஸ்டைல் அலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன துணைத் தலைவா் பி.முருகேசன், கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.பாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.