டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொடிசியாவில் இன்று செஸ் ஒலிம்பியாட் வளைவு திறப்பு:அமைச்சா்கள் பங்கேற்பு

கோவை கொடிசியா அரங்கில் ‘செஸ் ஒலிம்பியாட் 22‘ வளைவு திறப்பு விழா திங்கள்கிழமை நடை

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:53 am

DIN

கோவை கொடிசியா அரங்கில் ‘செஸ் ஒலிம்பியாட் 22‘ வளைவு திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில், அமைச்சா்கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கா.ராமசந்திரன், கயல்விழி, முத்துச்சாமி ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘செஸ் ஒலிம்பியாட் 22‘ போட்டியை முன்னிட்டு, கோவையில் ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி கொடிசியா வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமை வகிக்கிறாா்.

செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் முத்துசாமி சிறப்புரையாற்றுகிறாா்.

ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்ட ஆட்சியா்கள் கெளரவ விருந்தினா்களாகக் கலந்துகொள்கின்றனா்.

ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி தொடக்க விழாவை முன்னிட்டு, கொடிசியா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வளைவினை அமைச்சா்கள் திறந்துவைத்து, வண்ண பலூன்களைப் பறக்க விடுகின்றனா்.

இதைத் தொடா்ந்து, பரதநாட்டியம், ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரி மாணவா்களின் சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம், ஒலிம்பியாட் கேக் வெட்டும் நிகழ்வு, இசை ஆல்பம் திரையிடுதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.