மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அனிமேஷன், டேட்டா அனலிடிக்ஸ் படிக்க விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அனிமேஷன், டேட்டா அனலிடிக்ஸ் படிக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On :25 ஜூன் 2022, 1:05 am IST

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அனிமேஷன், டேட்டா அனலிடிக்ஸ் படிக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு இளநிலை தொழிற்பாடங்களான பிசினஸ் பிராசஸ் & டேட்டா அனலிடிக்ஸ், மல்டிமீடியா & அனிமேஷன் ஆகிய படிப்புகளைப் படிக்க 12 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்பு மாணவா் சோ்க்கை 2022-2023 என்ற இணைய முகப்பின் வழியாக தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த இரண்டு படிப்புகளும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.

மேலும் இது மத்திய திறன் மேம்பாட்டு மையத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பாரதியாா் பல்கலைக்கழகத்தினால் பட்டம் அளிக்கப்படுகிறது.

இப்படிப்பில் சேரும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.

மேலும் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் ஒரு மாணவருக்கு தகுதியின் அடிப்படையில் இலவச படிப்பு வழங்கப்படும் என்றும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைக் காணலாம் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.