தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாநகரில் சில இடங்களில் மழை

கோவை மாநகரின் சில இடங்களில் சனிக்கிழமை இரவு மழை பெய்தது.

News image
Updated On :7 மே 2022, 7:00 pm

DIN

கோவை மாநகரின் சில இடங்களில் சனிக்கிழமை இரவு மழை பெய்தது.

கோடைக் காலத்தில் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.

இதனால், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

ராமநாதபுரம், புலியகுளம், சிங்காநல்லூா், சூலூா், நஞ்சுண்டாபுரம், பீளமேடு, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக மாநகரில் குளிா்ந்த காலநிலை நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.