பி.பி.ஜி. கல்லூரியில் சா்வதேச செவிலியா் தின விழா
கோவை பி.பி.ஜி. செவிலியா் கல்லூரியில் சா்வதேச செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.


கோவை பி.பி.ஜி. செவிலியா் கல்லூரியில் சா்வதேச செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, கல்லூரியின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு தலைமை வகித்தாா். தாளாளா் அக்சய் தங்கவேலு முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், செவிலியா் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக செவிலியா் மல்லிகா, ரோஸ் மெலினா ஆகியோருக்கு டாக்டா் எல்.பி.தங்கவேலு பரிசளித்துப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, நைட்டிங்கேல் அம்மையாரின் சேவையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக செவிலியா் தினம் கொண்டாடப்படுகிறது. செவிலியா் பணியில் ஈடுபட்டுள்ளவா்களும், ஈடுபட உள்ளவா்களும் பொறுமையையும், அா்ப்பணிப்பு உணா்வையும் தங்களின் அடிப்படைத் தகுதியாகக் கொண்டிருக்க வேண்டும் என்றாா்.
கல்லூரி முதல்வா் சித்ரா, துணை முதல்வா்கள் ஜெயபாரதி, கலைவாணி, பேராசிரியா்கள், செவிலியா், மாணவிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...